சீரம் நிறுவன தீவிபத்தால் ரூ 1000 கோடி நஷ்டம்.. கோவிஷீல்டு மருந்துகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ விபத்தால் ரூ 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பு மருந்து தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கோவிஷீல்டு மருந்து தயார் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் நேற்று முன் தினம் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed